காடை கறியில் பெரிய புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆரணி ஹோட்டல்கள்
ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுரை பாண்டியன் தனியார் உணவகத்தில் சாப்பிடும் போது ஒருவருக்கு வைக்கப்பட்டிருந்த காடை ரோஸ்டில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுரை பாண்டியன் ஓட்டல் இயக்கி வருகிறது. இந்த ஓட்டலில் சைவம் மற்றும் அசைவம் சமைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது .
இதில் நேற்று மதியம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரை பாண்டியன் ஓட்டலில் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது அவர் காடை ரோஸ்ட் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார்.

காடை ரோஸ்ட்
இதையடுத்து ஊழியரும் காடை ரோஸ்ட்டை கொண்டு வந்து வைத்தார். காடையை ஆசையாக சுவைக்க முற்பட்ட போது அந்த உணவில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனே ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்
இதனால் அந்த இரு ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்ட அபராதம் விதித்து, அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்த பின்னர் கடையை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காடை பின்பு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போன் மூலம் புகார் அளித்தார். அவர்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்பு பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்வதாக சென்றுவிட்டார். ஏற்கெனவே ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே இருவேறு ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமியும், தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவனும் பலியான சம்பவங்கள் நடந்துள்ளன. கறியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு ஹோட்டல்களுக்கு அபராதம்
இதனால் அந்த இரு ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்ட அபராதம் விதித்து, அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்த பின்னர் கடையை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காடை கறியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை
மனிதன் வாழ்வதே ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான். அதிலும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இது போல் அஜாக்கிரதையாகவும் அலட்சியமாகவும் உணவு சமைப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதே போல் சென்னையில் வி.ஆர். மாலில் ஒரு ஹோட்டலில் சோலாபூரியில் புழு இருந்ததும், அதை தட்டி கேட்ட போது ஊழியர், ஒரு புழுதானே என அதிர்ச்சி அளிக்கும் பதிலை சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications