'இது உங்கள் சொத்து': அரசு பஸ்சை கடத்தி சென்றவர் கைது
மதுரை: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் கடத்தப்பட்டது. அந்த பஸ்சை கடத்தி 12 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று, ராமநாதபுரத்தில் இருந்து குமுளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் முன்பக்க கண்ணாடியில் மழைநீரை துடைத்து சுத்தம் செய்யும் வைப்பர் கருவி சரிவர இயங்கவில்லை.
இதனால் தேனி புதிய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் ஏற்றி விடப்பட்டனர். இதையடுத்து பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைக்கு பஸ்சை டிரைவர் ஜெயராமன் கொண்டு சென்றார்.

அங்கு பஸ்சில் பழுது சரி பார்க்கப்பட்டது. பின்னர் பஸ்சை பணிமனையில் இருந்து வெளியே எடுத்து வந்தார். பணிமனைக்கு எதிரே பஸ்சை நிறுத்தி விட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டிரைவரும், கண்டக்டரும் சாப்பிடச் சென்று விட்டனர்.
திரும்பி வந்து பார்த்த போது சாலையோரம் நிறுத்தி இருந்த பஸ்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், ஜெயராமன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கோட்டூரில் சாலை தடுப்பில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பஸ், பழனிசெட்டிபட்டியில் இருந்து கடத்தி வரப்பட்ட பஸ் என்பது தெரியவந்தது.
விசாரணையில், பஸ்சை கடத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியது கோம்பை நகரை சேர்ந்த மணிகண்டபிரபு (25) என்று தெரியவந்தது. அவரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
எலக்ட்ரிஷியனான மணிகண்ட பிரபு, எலக்ட்ரிக் பொருள்கள் வாங்க கம்பம் சென்றிருந்தார். குடிபோதையில் இருந்த மணிகண்ட பிரபு, தவறுதலாக தேனி செல்லும் பேருந்தில் ஏறிவிட்டாராம். எனவே, அவரை அந்த பேருந்தின் நடத்துநர் தேனி பழனிசெட்டிபட்டியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
மது போதையிலும், பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கோபத்திலும், புத்தி தடுமாறிய நிலையில் இருந்த மணிகண்ட பிரபு, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை கிளப்பிச் சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஸ்சை கடத்தி வந்த மணிகண்டபிரபு அந்த பஸ்சை பழனிசெட்டிபட்டியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும், கோட்டூரில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்படுத்திய போது, அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த சீலையம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (47) என்பவர் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வீரபாண்டி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications