தெய்வமே, தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. காரைக்காலில் முதல் நாளே குடிமகன்கள் செய்த அட்டகாசம்
காரைக்கால்: தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Recommended Video
புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக இன்று முதல் அனைத்து கடைகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காரைக்கால் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டது. நீண்ட நாளைக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுபான பிரியர்கள் காலை முதலே கடைகள் முன்பு ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் காரைக்காலில் உள்ள ஒரு மதுபானக்கடை காலை 9 மணிக்கு திறக்கப்பட்ட போது அங்கு கூடியிருந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

மதுகுடிப்போர்
கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குடித்து வந்த எங்களுக்கு, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மதுக்குடிப்போர் தெரிவித்துள்ளனர்,.

கடலூர் எல்லை
இதனிடையே கடலூர், புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக்கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு தமிழக பகுதி குடிமகன்கள் காரணமாகும். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கி செல்கின்றனர். சாராயக்கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

பெரும் சாதனை
இதெல்லாம் டிரெய்லர் தான். மெயின் பிக்சர் எல்லாம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கும் போது இருக்கிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத மதுவிற்பனை கடந்த மே 8 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது. இரண்டு நாட்களில் மட்டும் 800 கோடிக்கு மேல் விற்பனையானது.

கசப்பான உண்மை
எனவே ஒரு வேளை அடுத்த வாரம் திங்கள் முதல் கடை திறக்கப்பட்டால், கடந்த மாதம் இரண்டு நாளில் விற்ற சாதனையை தமிழகம் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மது அருந்துவோர் எண்ணிக்கை தமிழத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பது கசப்பான உண்மை.












Click it and Unblock the Notifications