உள்ளாடை வாங்கச் சென்ற இடத்தில் பெண் விற்பனையாளருக்கு முத்தமிட்ட வாலிபர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு ஜவுளிக் கடையில் உள்ளாடை வாங்கச் சென்ற வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் விற்பனையாளரை முத்தமி்ட்ட அநாகரீகமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு, தேவர் காலனியை சேர்ந்த கொம்பையா மகன் பேச்சிமுத்து. இவர் கயத்தாறு பழைய கடம்பூர் சாலையில் உள்ள ரெடிமேட் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 19 வயதான ஒரு பெண் விற்பனையாளர் விற்பனைப் பகுதியில் நின்றிருந்தார். அவரிடம் சென்ற பேச்சிமுத்து, தான் பனியன், ஜட்டி வாங்க வந்திருப்பதாக கூறியுள்ளார். தனது அளவையும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண் விற்பனையாளர் பனியன் உள்ளிட்டவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.
அவற்றை பார்த்துக் கொண்டிருந்த பேச்சிமுத்து, திடீரென அப்பெண்ணை இழுத்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். இதை எதிர்பாராத அப்பெண் அலறி உதவி கோரினார். இதைக் கேட்டு கடையில் இருந்தவர்கள் ஓடி வந்து பேச்சிமுத்துவைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸுக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் அவரை ஒப்படைத்தனர்.
போலீஸார் பேச்சிமுத்துவைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications