7 ஏக்கர் நிலம், தென்னை மரம்.. சொத்து ஆவணங்கள், பாகப்பிரிவினை சிக்கல்? தஞ்சை கலெக்டரிடம் ஓடிய தம்பதி
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் வயதான தம்பதியினர் புகார் ஒன்றை கண்ணீர் மல்க தந்திருக்கிறார்கள்.. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது?
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்ற 74 வயது முதியவர் தன்னுடைய மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார்..
அந்த மனுவில் உள்ளதாவது: "எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனது மகன்கள் என்னையும், என் மனைவியையும் சரிவர பராமரிக்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர்.

7 ஏக்கர் நிலம்: எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம், 2 மாடி வீடு போன்ற சொத்துக்கள் உள்ளன. எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்றுகொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் மருமகளில் ஒருவர் நாங்கள் கட்டிய வீட்டை எங்களை குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும், எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
வயதான காலத்தில் எங்களைகொடுமைப்படுத்துகின்றனர். எனவே எனது பெரிய மகனிடம் இருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர வேண்டும். அவ்வாறு மீட்டு தந்தால் 4 மகன்களுக்கு பாகம் பிரிக்க உதவியாக இருக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரைவில் பரிசீலத்து, உரிய நடவடிக்கையை எடுப்பார் என்று நம்பப்படுகிறது.
சொத்துக்கள்: பொதுவாக, ஒருவர் தன்னுடைய சொத்துக்களை இன்னொருவருக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டால், கொடுத்த சொத்தை மறுபடியும் திரும்ப பெற முடியாது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை. ஏராளமான காரணங்களால், சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை தந்து விடுகிறார்கள். வாரிசுகளும் அந்த சொத்தை வாங்கிக்கொண்டு, பெற்றோரை கவனிக்காமலும், கண்டுகொள்ளாமலும் நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்கள்.
இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், நிர்க்கதியற்ற வயதான பெற்றோர்கள், மாவட்ட கலெக்டர்களிடம் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் வந்துவிடுகிறார்கள்.
செட்டில்மென்ட் பத்திரம்: எனவே, தான் சம்பாதித்த சொத்தை, அந்த செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்று பலரும் பலமுறை ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்... அதனால்தான், "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறையும் இதில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..
சமீபத்தில் வருவாய் துறை அதிகாரிகள் இதுகுறித்து சில கருத்துக்களையும் கூறியிருந்தனர். அதில், "குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டும், செட்டில்மென்ட் பத்திரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால், புதிதாக சொத்து வாங்கும்போது, அதை விற்பவர் செட்டில்மென் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா? சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
கவனம் தேவை: பெற்றோருக்கும், வாரிசுகளுக்கும் இடையிலான பிரச்சனையால், அந்த சொத்தை வாங்க வரும் நபர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படகூடாது. எனவே, சொத்து வாங்கும்போது, அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான பிரச்சனைகள் என்னென்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும் என்று வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications