தஞ்சாவூர் பள்ளிவாசலில் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்! கடும் நடவடிக்கை கோரும் எஸ்.டி.பி.ஐ!
தஞ்சை: தஞ்சாவூரில் பள்ளிவாசலுக்குள் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரரை ராணுவ பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
காலணியுடன் சென்று பள்ளிவாசலின் புனிதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல்-அன்சர் பள்ளிவாசலில், நேற்று முன்தினம் அதிகாலை வேளையில், தொழுகைக்கான பாங்கு அழைப்பு விடுத்தபோது, பள்ளிவாசலுக்குள் காலனியுடன் அத்துமீறி தேசிங்கு ராஜா என்பவர் நுழைந்திருக்கிறார்.''
''பள்ளிவாசல் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதோடு, பள்ளிவாசலின் புனிதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். இராணுவத்தில் பணிபுரிவதாக கூறப்படும் தேசிங்கு ராஜா, ஜமாத்தார்கள் மற்றும் அமைப்புகளின் புகாருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்''.
''இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இராணுவ பணியிலிருந்தும் நிரந்ததமாக நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications