கஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 200 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் வீசிய புயலால் தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. மின் இணைப்பு இன்றி கடும் சிரமத்தை சந்தித்து வரும் டெல்டாவாசிகள் ஜெனரேட்டர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

[மழை, வெயில் தெரியாது.. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின் ஊழியர்கள்.. டெல்டா ஹீரோஸ்! ]
சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதே நேரம் 7 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கஜா புயல் சேத விவகாரங்கள் குறித்து துறை வாரியாக இழப்பீடு மதிப்புகள் கணக்கிடப்பட்டு, மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஊரகப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மின்இணைப்பு சரி செய்வதற்காக புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வந்துள்ளது நினைவிற்குரியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications