டெல்டா மண்டலத்தில் அதிர்ச்சி! தஞ்சையில் நீக்கப்பட்ட 2 லட்சம் வாக்காளர்கள்! திண்டுக்கல்லில் என்ன நிலைமை
தஞ்சை: தமிழ்நாடு முழுக்க சார் பணிகள் முடிந்து இப்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெல்டா மண்டலமான தஞ்சையில் 2.06 லட்சம் வாக்காளர்களும் திண்டுக்கல்லில் 3.25 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சார் பணிகளைத் தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்த பணிகள் கடந்த வாரம் முடிந்த நிலையில், அதில் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இதற்கிடையே இப்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சார் பணிகளுக்கு முன்பு 19,34,447 வாக்காளர்கள் இருந்தனர். சார் பணிகளுக்குப் பிறகு அது 16,09,553ஆக குறைந்துள்ளது. அதாவது சார் பணிகளில் அங்குள்ள 7 ஏழு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,24,894 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி வாரியாக பார்க்கும்போது, திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 60,493 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. பழனி சட்டசபை தொகுதியில் 52, 174 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் 34,127 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆத்தூர் சட்டசபை தொகுதியில் 48, 145 வாக்காளர்களும், நிலக்கோட்டையில் 41, 850 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல நத்தம்- 46,133, வேடசந்தூர் - 41,972
அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.06 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வரைவுப்பட்டியலில் 20,98,561 பேர் மட்டும் இடம்பெற்றுள்ளனர். அங்கு SIR பணிகளில் 9.84% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications