ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா.. நவம்பர் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சாவூர்: மாமன்னா் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழா அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சதய விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 1 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளதாவது: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னா் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தன்று சதய விழா கொண்டாடப்படுகிறது.

நடப்பு ஆண்டில் 1040 ஆம் ஆண்டு சதய திருநாள் அக்டோபா் 31 ஆம் தேதி, நவம்பா் 1 ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நவம்பா் 1 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications