கிணத்த காணோம்னு பாத்தா..தஞ்சாவூர்ல புதைச்ச பொணத்தையே காணோம்! பால் தெளிக்க போனவர்களுக்கு ஷாக்! பரபர!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உடல் நலக் குறைவால் உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று மாலை மணியாற்று கரையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இன்று காலை சடங்குகள் செய்ய சிறுமியின் குடும்பத்தினர் சென்றபோது சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மந்திரவாதிகள் மாந்திரீக பூஜைகளுக்காக சிறுமியின் உடலை தோண்டி எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (48), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (33.) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது இரண்டாவது மகள் தர்ஷிகா (12) பந்தநல்லூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல், நேற்று அவரது குடும்பத்தினரின் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மண்ணியாறு இடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இடுகாடு வழியாக வந்த சிலர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது சிறுமியின் உடை மற்றும் லேசாக வெளியே தெரிந்துள்ளது. எனவே அவரது உடல் உள்ளே உள்ளதா அல்லது தோண்டி அடுத்த சென்று விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த தகவல் அறிந்து பந்தநல்லூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மண்ணாயாறு இடுகாடு பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலை வருகிறது. மந்திரவாதிகள் மாந்திரீக பூஜைகளுக்காக சிறுமியின் உடலை தோண்டி எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications