பள்ளி மாணவர்களை கட்டட வேலை செய்ய வைத்த தலைமை ஆசிரியர்.. அதற்கு அவர் தந்த அடடே விளக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்டட வேலை செய்ய ஈடுபடுத்திய சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலக்குடிமுளை என்ற ஊராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்ப்பவர் சரவணன். இவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அருண் சூசை என்பவரிடம் நிதி வாங்கி, 20 லட்சம் ரூபாயில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி கட்டுகிறார்கள்.

அந்த கட்டிடத்திற்கு எந்த ஒப்பந்ததாரர்களும் நியமிக்காமல், பள்ளி வளர்ச்சி குழு, தலைமை ஆசிரியர் தலைமையில் இந்த பள்ளியை கட்டி வருகிறார்கள்.
அதற்கு ஒப்பந்ததாரர்கள் வேலை பார்த்தாலும், கல் எடுக்க, மண் எடுக்க,சுவற்றுக்கு தண்ணீர் பிடிக்க போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளார்கள். அதன் அடிப்படையில் செய்தி வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி தலைமை ஆசிரியர் கூறும் போது, யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி மாணவர்கள் தாங்களாக முன் வந்து பள்ளிக்கு வேலை பார்த்தார்கள். அவர்களாக விருப்பப்பட்டு வேலை பார்த்தார்கள் .
எனினும் இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இதனிடையே மாணவர்களை எதற்காக கட்டிட வேலை செய்ய அனுமதித்தீர்கள் என்று பெற்றோரும் கேள்வி எழுப்பினார்கள். படிக்கத்தான் எங்கள் பிள்ளையை அனுப்பி உள்ளோம். சித்தாள் வேலை செய்ய பிள்ளைகளை அனுப்பவில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.
ஒப்பந்தம் விட்டுதான் பள்ளி கட்டிடத்தை கட்டியிருக்க வேண்டும் என்றும் ஏன் தலைமை ஆசிரியரே முன் நின்று கட்டிடத்தை கட்டுகிறார் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பள்ளி வளர்ச்சி குழு தான் இந்த பள்ளியை கட்டி வருவதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்தார்.

இதுபற்றி தலைமை ஆசிரியர் சரவணன் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஜேர்சி ஸ்கவுட் மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தி மரங்கன்றுகள் நட்டார்கள். பள்ளியில் பாம்புகள் வரக்கூடாது என்பதற்காக கற்களை எல்லாம் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்" என்று தலைமை ஆசிரியர் சரவணன் கூறினார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications