பள்ளி மாணவர்களை கட்டட வேலை செய்ய வைத்த தலைமை ஆசிரியர்.. அதற்கு அவர் தந்த அடடே விளக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்டட வேலை செய்ய ஈடுபடுத்திய சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலக்குடிமுளை என்ற ஊராட்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்ப்பவர் சரவணன். இவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அருண் சூசை என்பவரிடம் நிதி வாங்கி, 20 லட்சம் ரூபாயில் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி கட்டுகிறார்கள்.

அந்த கட்டிடத்திற்கு எந்த ஒப்பந்ததாரர்களும் நியமிக்காமல், பள்ளி வளர்ச்சி குழு, தலைமை ஆசிரியர் தலைமையில் இந்த பள்ளியை கட்டி வருகிறார்கள்.
அதற்கு ஒப்பந்ததாரர்கள் வேலை பார்த்தாலும், கல் எடுக்க, மண் எடுக்க,சுவற்றுக்கு தண்ணீர் பிடிக்க போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளார்கள். அதன் அடிப்படையில் செய்தி வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி தலைமை ஆசிரியர் கூறும் போது, யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி மாணவர்கள் தாங்களாக முன் வந்து பள்ளிக்கு வேலை பார்த்தார்கள். அவர்களாக விருப்பப்பட்டு வேலை பார்த்தார்கள் .
எனினும் இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இதனிடையே மாணவர்களை எதற்காக கட்டிட வேலை செய்ய அனுமதித்தீர்கள் என்று பெற்றோரும் கேள்வி எழுப்பினார்கள். படிக்கத்தான் எங்கள் பிள்ளையை அனுப்பி உள்ளோம். சித்தாள் வேலை செய்ய பிள்ளைகளை அனுப்பவில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.
ஒப்பந்தம் விட்டுதான் பள்ளி கட்டிடத்தை கட்டியிருக்க வேண்டும் என்றும் ஏன் தலைமை ஆசிரியரே முன் நின்று கட்டிடத்தை கட்டுகிறார் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பள்ளி வளர்ச்சி குழு தான் இந்த பள்ளியை கட்டி வருவதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்தார்.

இதுபற்றி தலைமை ஆசிரியர் சரவணன் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஜேர்சி ஸ்கவுட் மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தி மரங்கன்றுகள் நட்டார்கள். பள்ளியில் பாம்புகள் வரக்கூடாது என்பதற்காக கற்களை எல்லாம் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்" என்று தலைமை ஆசிரியர் சரவணன் கூறினார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications