தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்து.. சாலையில் சென்ற பெண் பரிதாப மரணம், தஞ்சை சோகம்

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்ததால் சாலையில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பேனர் வைத்த ரவிச்சந்திரன் என்பவரை திருவோணம் போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் விழுந்து.. சாலையில் சென்ற பெண் பரிதாப மரணம், தஞ்சை சோகம் - வீடியோ

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் தந்தை முத்துவீரப்பன் மரணம் அடைந்தார்.

    இதனால் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் ரவிச்சந்திரன் தனது தந்தையின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

     ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம் ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம்

    8வது நாள் காரியம்

    8வது நாள் காரியம்

    அந்த வழியாக வந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார்.

    108 ஆம்புலன்சு

    108 ஆம்புலன்சு

    அப்போது மேட்டுப்பட்டி வந்தபொழுது ரவிச்சந்திரன் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை, அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு உதவியோடு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருவோணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிளக்ஸ் பேனரை கைப்பற்றி பிளக்ஸ் பேனர் வைத்த ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த விஜயராணி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    பெண் உயிரிழப்பு

    பெண் உயிரிழப்பு

    சென்னை உயர்நீதிமன்றம் சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கு இடர்பாடுகள் உள்ள இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளாட்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை வருவாய்த் துறையின் அலட்சியப் போக்கே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சாலையில் சென்ற பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    English summary
    A woman who went on the road died tragically when a placard banner fell near Thiruvonam in Tanjore district. Thiruvonam police arrested Ravichandran who held the banner.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X