23 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Recommended Video
தஞ்சாவூர்: 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி தஞ்சாவூர் நகரே பெருவிழா கோலம் பூண்டிருக்கிறது.
தமிழர்களின், திராவிடர் கலையின் மெச்சத்தகுந்த உச்சமாக போற்றப்படுகிறது தஞ்சை பெரிய கோவில். விண்முட்ட நிற்கும் கற்கோபுரத்தை பெருவேந்தன் ராஜராஜனும் அன்றைய தமிழ்க் குடிகளும் கட்டி முடித்த வித்தையை நினைத்தாலே வரலாறு சிலிர்க்கும்.

இத்தகைய பெருமைக்குரிய தஞ்சை பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரிய் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இக்குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்த வேண்டும் என்பது பல்வேறு தரப்பினர் கோரிக்கை. ஆனால் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்றது ஒருதரப்பு.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. அப்போது, தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என தமிழக அரசு உறுதி மொழி அளித்தது. இதனையடுத்து இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தற்போது தஞ்சாவூர் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சாரை சாரையாக தஞ்சை பெரிய கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.
தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி தஞ்சாவூர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications