டென்ஷனான தஞ்சாவூர் மேயர்.. பெண் உதவி பொறியாளரின் செல்போனை பறித்து பாக்கெட்டில் வைத்ததால் பரபரப்பு
தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வின்போது தஞ்சாவூர் மேயர் ராமநாதன் உதவி பெண் பொறியாளரின் செல்போனை பிடுங்கி பாக்கெட்டில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் அவர் அப்படி செய்தார்?.
தஞ்சாவூர் மாநகராட்சி திமுக வசம் உள்ளது. இந்த மாநகராட்சியின் மேயராக ராமநாதன் செயல்பட்டு வருகிறார். இவர் திமுகவை சேர்ந்தவர். தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி அதிகமாக பாதிக்கப்பட்டன. தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்பட பல டெல்டா மாவட்டங்களும் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பை எதிர்கொண்டன. மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் தான் வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி தஞ்சாவூரில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழ்வான இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை அவர் நேரடியாக கேட்டார். மேயர் ராமநாதனுடன் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர். 11வது வார்டில் பொதுமக்களிடம் மேயர் ராமநாதன் குறைகளை கேட்டார்.

அப்போது அவர் அருகே நின்று குறைகளை குறிப்பெடுத்து கொண்டி உதவி பெண் பொறியாளர் ஆனந்தி மாயமாகி இருந்தார். அவர் மேயர் ராமநாதனை விட சிறிது தூரம் தள்ளி நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை கவனித்த மேயர் ராமநாதன் அவரை பார்த்து, ‛‛இங்க வாங்கம்மா'' என அழைத்தார். செல்போனை காதில் வைத்தபோது ஆனந்தி வந்தார்.
இந்த வேளையில் திடீரென்று மேயர் ராமநாதன், ‛‛அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' எனக்கூறி செல்போனை வாங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டார். மேலும், ‛‛நாம் பொதுமக்களிடம் குறைகளை கேட்க தான் வந்து இருக்கிறோம். குறைகளை கேட்டு குறிப்பெடுங்கள். பிறகு செல்போனில் பேசிக்கொள்ளலாம்'' எனக்கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications