மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா.. தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கியது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் மன்னர் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இவ்விழா இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. நாளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ராஜராஜ சோழ மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அரசு விழாவாக இரண்டு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இதற்காக மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பட்டிமன்றம், கவியரங்கம், அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், இசை கச்சேரிகள் நடைபெறவுள்ளன.
அதேபோல, மாலையில் பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். அதேபோல, பல்வேறு அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு துறை சார்ந்த அறிஞர்களுக்கு ராஜராஜ சோழன் விருதை வழங்கவுள்ளனர்.
விழாவையொட்டி, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால், தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
அன்புமணி ராமதாஸ் அறைகூவல்: மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப் பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications