அதிர்ச்சி அலைகள்.. தஞ்சையில் கேட்ட பயங்கர சத்தம்.. பின்னணியில் சோனிக் பூம்.. பரபரப்பு தகவல்கள்!
தஞ்சாவூர்: நேற்று தஞ்சாவூரில் பயங்கரமான சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் திடீர் என்று மதிய நேரத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. பெரிய அளவில் வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. பெங்களூர் முழுக்க பல்வேறு பகுதிகளில் சத்தம் கேட்டது.
இதனால் பெங்களூரில் எங்காவது வெடிகுண்டுகள் வெடித்துவிட்டதா என்று மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக இணையம் முழுக்க நிறைய விவாதங்கள் நடந்தது. பெங்களூருக்கு ஏலியன் வந்துவிட்டதா என்றும் கூட விவாதம் செய்தனர்.

உண்மை என்ன
இந்த நிலையில் பெங்களூரில் இப்படி மிக அதிகமாக பயங்கர சத்தம் கேட்க காரணம் சோனிக் பூம் என்று இந்திய விமானப்படை விளக்கம் அளித்தது. பொதுவாக விமானப்படை விமானங்கள் சப் சோனிக், சோனிக், சூப்பர் சோனிக், ஹைப்பர் சோனிக் என்று பல விதமான வேகங்களில் பரவும் திறன் கொண்டது. இதில் விமானம் சோனிக் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பறந்தால் பயங்கர சத்தம் கேட்கும்.

அதிர்ச்சி அலைகள் வரும்
விமானம் அல்லது ராக்கெட் காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் அதிர்ச்சி அலைகள் ஒன்றாக சேர்ந்து இப்படி சத்தம் கேட்கும். இதைத்தான் சோனிக் பூம் என்று கூறுவார்கள். பெங்களூரில் இப்படித்தான் அன்று சோனிக் பூம் கேட்டு இருக்கிறது. விமானப்படை புதிய வகை சோனிக் ரக விமானம் ஒன்றை வைத்து பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்த பயங்கர சத்தம் கேட்டு இருக்கிறது.

தஞ்சாவூர்
இந்த நிலையில் தஞ்சாவூரில் இதேபோல் சோனிக் பூம் சத்தம் கேட்டு இருக்கிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுக்கூர், நாகப்பட்டினத்தில் சில பகுதிகளில் இந்த சத்தம் கேட்டு இருக்கிறது. பயங்கரமாக வெடி வெடிப்பது போல சத்தம் கேட்டது. இதனால் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதற்கும் சோனிக் பூம்தான் காரணம் என்கிறார்கள்.

விமானப்படை
தஞ்சையில் விமானப்படை சமீப நாட்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் விமானப்படை தளத்திற்கு புதிய வகை விமானங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு சோனிக் ரக விமானங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு இப்படி சத்தம் கேட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விமானப்படை இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தயார் நிலை
கடந்த ஒரு மாதமாகவே நாடு முழுக்க விமானப்படை தீவிர பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. தங்களின் விமானங்களை நாட்டுக்கு உள்ளேயே பறக்க வைத்து தீவிரமாகபயிற்சிகளை செய்து வருகிறது. இதனால் நாடு முழுக்க பல இடங்களில் அடிக்கடி சோனிக் பூம் சத்தங்கள் கேட்டு வருகிறது. பெங்களூரில் அடிக்கடி இந்த சத்தம் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications