கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை! அதுக்கு காரணமே நண்பர்கள் தானாம்! அப்படி என்ன பண்ணாங்க!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் புகைப்படத்தை சிறிய கட்அவுட்டாக நண்பர்கள் பரிசு அளித்ததால், உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை, தேம்பி தம்பி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு - கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் கோயில் ஒன்றில் நடைபெற்றது.
கோயிலில் திருமணம் செய்த பின்னர், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமண வரவேற்பு
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உறவினர்களும், மற்றவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், உயிரிழந்த தந்தை மீது அதீத பாசம் வைத்துள்ள அறிவழகனுக்கு, வித்தியாசமான முறையில் பரிசு அளிக்க அவரது நண்பர்கள் விரும்பினர்.

தந்தையின் உருவப் படம்
அதன்படி, அறிவழகனின் தந்தையின் உருவப் படத்தை பேனரில் அச்சடைத்து, அதனை சிறிய கட்அவுட்டாக வடிவடிமைத்து மாப்பிள்ளைக்கு பரிசாக வழங்கினர். சிறிய கட்அவுட் வடிவில் வடிவமைக்கப்பட்ட தந்தையின் உருவப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை அறிவழகன், திடீரென தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத பரிசு அளித்த நண்பர்கள், அவரை சமாதானம் செய்தனர்.

அழுத மாப்பிள்ளை
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் உருவ படத்தைப் பார்த்து மாப்பிள்ளை அழுத சம்பவம், மணப்பெண் உட்பட உறவினர்களும் கண் கலங்க செய்தது. இந்த செண்டிமேண்ட் நிகழ்வு, அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. தனது தந்தையின் உருவப் படத்தை சிறிய கட்அவுட்டாக வடிவமைத்து பரிசளித்த நண்பர்களுக்கு அறிவழகன் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். தனது திருமணத்திற்கு நண்பர்கள் மூலம், தந்தையே நேரடியாக வந்து தன்னை ஆசீர்வாதம் செய்ததுபோல் உணர்ந்த மாப்பிள்ளை அறிவழகன், பரிசு அளித்த நண்பர்களை மனதார பாராட்டி மகிழ்ந்தார்.

நெகிழ்ச்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை, அங்கிருந்த சிலர் தங்களது செஃபோனில் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வேகமாக பரவி, பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு வருகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், நண்பர்கள் பரிசாக அளித்த தந்தையின் உருவப் படத்தைப் பார்த்து, மாப்பிள்ள்ளை தேம்பி தம்பி அழுத சம்பவம், கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications