"ரூ. 2 ஆயிரம் எனக்கு வேணாம்.. அதை முதல்வர் கிட்டயே திருப்பி தந்துடுங்க".. தேனியை வியக்க வைத்த பாட்டி
கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரத்தை திருப்பி தந்தார் தேனி பாட்டி
தேனி: தமிழக அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வேண்டாம் என்று பாட்டி ஒருவர் திருப்பி தந்துள்ளார்.. அவருக்கு நாலாபக்கமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தற்போது 2வது தொற்று வீரியமாகி கொண்டிருக்கிறது.. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பாடுபட்டு வருகின்றன.. அந்த வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் போட்டால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமே, என்று நினைத்துதான் ஊரடங்கு குறித்து நிறைய யோசனைகளில் அரசு இறங்கியது..

தமிழக அரசு
ஆனால் தொற்று எதிர்பாரா அளவுக்கு மோசமாகிவிடவும், முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

முதல்வர்
அதன்படி, கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு கடந்த 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2000 தரப்பட்டு வருகிறது. இந்த 2 ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாத தேவையாக உதவி வருகிறது.. ஆனால், இந்த 2 ஆயிரம் தனக்கு வேண்டாம் என்று ஒரு பாட்டி சொல்லி உள்ளார்.

நிதி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கல்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்மாள்.. இவர், நிவாரண நிதியாக தமிழக அரசு கொடுத்த ரூ.2000 பணத்தை திரும்பவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கே வழங்கியுள்ளார்.

முதல்வர்
முதல்வர் பொது நிவாரணத்திற்கு, நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தார்.. அதன்படியே, முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே தங்களால் முடிந்த அளவு நிதி வழங்கி வருகிறார்கள்.. ஆனால், உதவித்தொகையாக தரப்பட்ட நிதியைக்கூட, உதவியாக தந்துள்ளார் இந்த பாட்டி.. இதையடுத்து, அந்த பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பாராட்டு
இந்த பாட்டிக்கு 78 வயதாகிறது.. பிள்ளைகள் இவரை கவனித்து கொண்டாலும், தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.. ரேஷன் கடைக்கு வந்து 2 ஆயிரம் வாங்க முடியாத நிலைமை இவருக்கு இருந்தது.. எனவே, கூட்டுறவு சங்க செயலாளர் முருகராஜன் நேரில் சென்றுதான் பாட்டிக்கு இந்த பணத்தை வழங்கினார்... அப்போதுதான் ரத்தினம்மாள், "முதலமைச்சர் ஐயா அவர்கள் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். அதனால் அவருக்கு உதவி செய்யும் வகையில் எனக்கு கிடைத்த 2 ஆயிரம் பணத்தை கொரோன நிவாரண நிதியாக வழங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications