ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது!?
தேனி அருகே அதிமுக பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
தேனி: தோட்டத்தில் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடிவந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்து உள்ள டி.வி.ரங்கநாதபுரம். இங்குள்ள விவசாய தோட்டத்தில் இன்று காலை, எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

விரைந்து வந்த போலீசாரும் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், எரித்துக் கொலை செய்யப்பட்ட நபர் அதிமுக பிரமுகர் என்பதும், அவரது பெயர் சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும் சதீஷை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
சதீஷின் அப்பா பாண்டியராஜன், தாயார் பேச்சியம்மாள் இருவரும் இன்று விடிகாலை தோட்டத்திற்கு தண்ணி கட்டுவதற்காக சென்றபோதுதான், மகன் எரிக்கப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அலறி உள்ளார்கள். நேற்று இரவு, சதீஷ் "மதுரையில் இருக்கிறேன்" என்று தனது தாய் பேச்சியம்மாளிடம் தெரிவித்திருக்கிறார்.
அதனால் தேனிக்கு சதீஷ் எப்படி, எப்போது வந்தார், எதனால் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இன்னும் போலீசாரால் ஒரு முடிவுக்கு வரஇயலவில்லை. சதீஷுக்கு கட்சி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பிரச்சினை உள்ளதா என்று பல கோணங்களில் ஆண்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், பாதி எரிந்த நிலையில் தோட்டத்தில் பிணம் கிடந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications