ஹேய் நாங்க வர கூடாதா? பாஜகவை திணறடித்த 2 பெண்கள்.. "ம்மா போயிடும்மா".. கோபத்தில் சீறிய "காவிகள்"
தேனி:தேனியில் மத்திய அரசுக்கு எதிராக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஆர்வலரான நந்தினி மது ஒழிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார். மது ஒழிப்பு மட்டுமின்றி சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகவும் இவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் இன்று தேனியிலும் பழைய பேருந்து நிலையில் சமூக ஆர்வலரான நந்தினி தனது தங்கை நிரஞ்சனாவுடன் சேர்ந்து போராட்டம் செய்தார்.

பாஜக
மத்திய பாஜக அரசுக்கு எதிராக துண்டு சீட்டு கொடுத்து இவர் போராட்டம் செய்தார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி மத்திய அரசு மக்களை ஏமாற்றிவிட்டது. இளைஞர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். பெட்ரோல் , டீசல் விலையை குறைக்கவில்லை. தொடர்ந்து ஏற்றி வருகிறார்கள். பெரும் முதலாளிகளுக்கு 10.72 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். மக்கள் மீது ஜிஎஸ்டி வரி சுமையை ஏற்றி உள்ளனர் என்று கூறி கோஷம் செய்தனர்.

கோஷம்
இவர்கள் இருவரும் துண்டு சீட்டு கொடுத்தபடி கோஷம் எழுப்பியதை பார்த்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். நீங்க இரண்டு பேரும் போங்க. இங்க நிற்காதீங்க. மக்களுக்கு தொந்தரவு செய்யாதீங்க என்று போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசார் சொன்னதை கேட்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். நாங்கள் போராட்டம் செய்யவில்லையே, துண்டு சீட்டு தானே கொடுக்கிறோம் என்று பதிலுக்கு கூறினார்கள்.

பாஜக
ஆனால் இதை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. பெண் போலீசார் சிலர் வந்து அந்த பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பார்த்தனர். அப்போது தகவல் அறிந்து அங்கு பாஜகவினர் குவிந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய இரண்டு பெண்களையும் பார்த்து பாஜகவினர் எதிர் கோஷம் எழுப்பினர். காவி கொடிகளுடன் வந்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர்.

மோதல்
அப்போது அந்த பெண்களை பார்த்து ஏ நீ ஏன் இப்போ மதுவிற்கு எதிராக போராடுவது இல்லை.. இப்போ மட்டும் ஏன் பாஜகவை எதிர்க்கிற என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அந்த பெண்கள்.. நாங்கள் அனைத்தையும்தான் எதிர்க்கிறோம். வேலை வாய்ப்பு மாணவர்கள் பிரச்சனை அதை பற்றி பேசுகிறோம் என்று கூறினர். ஆனால் பாஜகவினர் அதை கேட்காமல் ஏ இங்க இருந்த போம்மா.. மக்களை தொல்லை செய்யாதே என்று கூறி கோஷம் எழுப்பினர்.

என்ன நடந்தது?
இதற்கு அந்த பெண்கள் பதிலுக்கு ஏன்.. நாங்க இங்க வர கூடாதா? என்ன சட்டம் இருக்கு? என்று கேட்டனர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நந்தினி மற்றும் நிரஞ்சனாவை கைது செய்து தேனி போலீசார் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றனர்.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications