கொரோனா- கேரளாவில் இருந்து மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர்- 2 பேர் பலி
தேனி: கொரோனாவால் போக்குவரத்து தடை அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 5 வயது பெண் குழந்தை உட்பட 2 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது

கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
இதனிடையே கேரளாவின் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே உள்ள பேத்தொட்டி என்ற இடத்தில் தோட்ட வேலை செய்து வந்த தேனி மாவட்டம் போடி ராசிங்கபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10 பேர் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வண்ணான்துறை வழியாக ராசிங்கபுரம் வருவதற்காக நடந்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர காட்டுத் தீயில் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக தேனி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற தேனி மாவட்ட வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் மீட்புப் பணி பலனளிக்காமல் ஐந்து மாத பெண் குழந்தையும் அவரது தாயும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்து விட்டனர். எஞ்சியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications