கொரோனா- கேரளாவில் இருந்து மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர்- 2 பேர் பலி
தேனி: கொரோனாவால் போக்குவரத்து தடை அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 5 வயது பெண் குழந்தை உட்பட 2 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது

கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
இதனிடையே கேரளாவின் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே உள்ள பேத்தொட்டி என்ற இடத்தில் தோட்ட வேலை செய்து வந்த தேனி மாவட்டம் போடி ராசிங்கபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10 பேர் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வண்ணான்துறை வழியாக ராசிங்கபுரம் வருவதற்காக நடந்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர காட்டுத் தீயில் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக தேனி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற தேனி மாவட்ட வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் மீட்புப் பணி பலனளிக்காமல் ஐந்து மாத பெண் குழந்தையும் அவரது தாயும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்து விட்டனர். எஞ்சியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications