திமுக கொடி கட்டப்பட்ட காரில்.. 9ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பகீர்! ஆலங்குளம் ஷாக்
ஆலங்குளம் திமுக பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி: ஆலங்குளம் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.. பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.
இது விஷயத்தில் சமீப காலமாக தமிழக அரசு கறார்தன்மை காட்டி வருவதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்தும் வருகிறது. அந்த வகையில் ஒருவர் சிக்கி உள்ளார். திமுக பிரமுகர்

திமுக
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பலபத்திரராமபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி.. 35 வயதாகிறது.. திமுக பிரமுகரான இவர், அந்த ஊரில் பொக்லைன் மற்றும் டிராக்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்... முத்துசாமி, நேற்று காலை ஊரில் இருந்து காரில் சின்னக்கோவிலான்குளம் சென்று கொண்டிருந்தார்..

கட்சி கொடி
தான் அந்த பகுதியில் முக்கிய பிரமுகர் என்பதால், காரில் திமுக கொடியும் கட்டப்பட்டிருந்தது.. மாவிலியூத்து நோக்கி கார் சென்றபோது, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.. பள்ளி முடித்துவிட்டு, அந்த மாணவி வீட்டுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருப்பது போல தெரிந்தது.

லிப்ட்
உடனே, அந்த மாணவியின் அருகில் காரை நிறுத்திய முத்துசாமி, பஸ் ஸ்டேண்டில் இறக்கி விடுவதாக சொல்லி, காரில் லிப்ட் தந்து ஏற்றி உள்ளார்... அப்போது முத்துசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.. காரை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஓட்டாமல் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.. அங்கு காரை நிறுத்திவிட்டு மாணவியிடம் சில்மிஷத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளார்.

கத்தி கூச்சல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர்.. உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சித்த முத்துசாமியை அந்த பகுதி இளைஞர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் முத்துசாமியை கைது செய்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி, முத்துச்சாமியின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

கோவை
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் வெடித்து கிளம்பி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரும், பள்ளி முதல்வரும சிறையில் உள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. அதிலும் திமுக பிரமுகரே இந்த கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிருப்தியையும் தந்து வருகிறது.
-
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்!












Click it and Unblock the Notifications