மின் கட்டணம்.. தமிழ்நாடு மின்சார வாரியமே அலர்ட் செய்த முக்கியமான விஷயம்.. மக்களே பாருங்க
தேனி: தற்போது பல மின் நுகர்வோர்களுக்கு, 'தங்களது மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிப்பு செய்யப்பட உள்ளது. துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருகிறது. இப்படி மின்வாரியம் பெயரில் அனுப்பப்படும் மோசடியான குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று தேனி மின்வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.
மோசடி செய்பவர்கள் பல்வேறு வழிகளை அதற்காக கையாண்டு வருகிறார்கள். மின் வாரியத்தின் பெயரில் ஏற்கனவே பல்வேறு முறைகளில் மோசடி நடந்து வருகிறது. அந்த வகையில் மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிக்கப்பட உள்ளதாக கூறி புதிய வகையில் மோசடியில் இறங்கி உள்ளனர்.

இப்படி வரும் எஸ்எம்எஸ் இல் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், பணத்தை பறிப்பது நடக்கிறது. அடிக்கடி மின்வாரியத்தின் பெயரை பயன்படுத்தி தான் மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே மின்சார பில் தொடர்பாக வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்து ஏமாந்துவிடாதீர்கள்.
இது தொடர்பாக தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி வட்டத்திற்குட்பட்ட மின்இணைப்புகளுக்கு வாரிய பணியாளர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கணக்கீடு செய்யப்படும் மின் இணைப்புகளின் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் பற்றிய விவரங்கள் நுகர்வோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த குறுஞ்செய்திகளில் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண், செலுத்த வேண்டிய தொகை மற்றும் கடைசி நாள் விவரங்கள் மட்டுமே இடம்பெறும். கட்டணம் தொடர்பாக மின்வாரிய அலுவலர்களையோ, பொறியாளர்களையோ தொடர்பு கொள்ளுங்கள் என்று எவ்வித செய்தியும் இடம் பெறாது.
தற்போது பல மின் நுகர்வோர்களுக்கு, 'தங்களது மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிப்பு செய்யப்பட உள்ளது. துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் பெறப்படுகின்றன. இது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். மின்வாரியம் இதுபோன்ற குறுஞ்செய்திகளை எப்போதும் அனுப்புவதில்லை. எனவே இதுபோன்ற குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
மின்பயன்பாட்டு கட்டணத்தை இணையவழியிலும், மின்வாரிய செயலி, தபால் அலுவலகம் மூலமாகவும் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இவ்வசதிகளை பயன்படுத்தி உரிய காலத்தில் பணம் செலுத்தி இதுபோன்ற மோசடிகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
அரசு ஊழியர்களின் முதல் தேர்வு தேனி, கன்னியாகுமரி.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் விரும்புவது ஏன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications