விசாரணைக்கு ஆஜராகாத ரவீந்திரநாத் எம்பி.. வனத்துறையிடம் விளக்க கடிதம்..தூரத்தும் சிறுத்தை பலி மேட்டர்
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ரவீந்திரநாத் எம்பி விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக அவரது தரப்பில் விளக்கம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக உள்ளார்.
தேனி மாவட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கைலாசப்பட்டி கிராமத்தின் அருகே சொர்க்கம் கோம்பை பகுதியில் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

செத்து கிடந்த சிறுத்தை - 5 பேர் கைது
தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி தோட்டத்தில் ஒரு சிறுத்தை செத்து கிடந்தது. அதன்பிறகு சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து வனத்துறையினர் விசாரணையை துவங்கினர். தோட்டத்திற்குள் ஆட்டுக்கிடை அமைத்து தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தே கரிசல்குளத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், தங்கவேல், ராஜவேல் ஆகியோர் மீது கைது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தப்பட்டனர்.

களமிறங்கிய திமுக
இந்நிலையில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்பி ரவீந்திரநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தனர். மேலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது. இதையடுத்து ரவீந்திரநாத் எம்பியிடம் விசாரிக்க அனுமதி கோரி நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு தேனி மாவட்ட வனத்துறை கடிதம் எழுதியது.

ரவீந்திரநாத்துக்கு சம்மன்
இதையடுத்து சிறுத்தை இறந்து கிடந்த தோட்டம் என்பது தேனி எம்பி ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கு சொந்தமானது எனக்கூறி மூவருக்கும் கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. 2 வாரத்துக்குள் தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ரவீந்திரநாத் எம்பி ஆஜராகலாம் என கூறப்பட்டது.

வழக்கறிஞர்கள் விளக்க கடிதம்
ஆனால் இன்று ரவீந்திரநாத் எம்பி விசாரணைக்கு ஆஜராகாமல் நழுவினார். இருப்பினும் அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் வந்து தேனி மாவட்ட வனத்துறையிடம் கடிதம் ஒன்றை வழங்கினர். வழக்கறிஞர் சந்திசேகரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலார் ஷர்மிலியிடம் கடிதம் கொடுத்தனர்.

தொடர்பு இல்லை
இதுபற்றி வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், ‛‛7 வது இந்திய குடிநீர் வாரம் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரவீந்திரநாத் எம்பி சென்றுள்ளார். இதனால் அவரால் ஆஜராக முடியவில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை விசாரணையில் இருந்து வனத்துறையினர் விடுவிக்க வேண்டும். மேலும், சிறுத்தை மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications