கணவனுக்காக வீடு, வீடாக பயணம் ... மாமியாருடன் சேர்ந்து வாக்கு கேட்ட ஓபிஎஸ் மருமகள்!
Recommended Video

தேனி: தேனி மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பிரசாரம் செய்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில், அவரது மனைவியும், தாயும் அவருக்காக தேனியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஓபிஎஸ்ஸின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது மருமகள் ஆனந்தி, ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜாவின் மருமகள் ஐஸ்வர்யா, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேலின் மனைவி ஆகியோர் நேற்று தேனி அருகே வடபுதுப்பட்டி கிராமத்திற்கு சென்றனர்.
அவர்களுடன் 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க மகளிர் அணியினரும், பெரியகுளம் அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் கட்சியினரும் சென்றனர். அவர்கள் வீடு வீடாக சென்று ரவீந்திரநாத்குமாருக்கும் , மயில்வேலுக்கும் ஓட்டு போடுமாறு கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
மகனுக்காக அம்மாவும், கணவனுக்காக மனைவியும் கிராமம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது தேனி அரசியல் களத்தில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications