கிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்!
Recommended Video
தேனி: தேனி தொகுதியில் பெற்ற வெற்றி மட்டுமல்லாமல், லோக்சபா அதிமுக தலைவராகவும் திகழ்வது என்பதை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக, வாய்ப்பாக கருதுகிறாராம் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்.
இந்த மாதிரியான வாய்ப்பு இதுவரை அதிமுகவில் யாருக்கும் கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக உள்ளாராம்.
தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர் ஓ.பி.ரவீந்தரநாத்குமார்.

கடும் போட்டி
கடும்போட்டிக்கு மத்தியிலும், அதுவும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியை கடந்தும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இவர். தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு தனது அதிகாரத்துக்குட்பட்டு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்ய வேண்டும் என நினைக்கிக்கிறார் ரவீந்தரநாத்.

எம்பி அலுவலகங்கள்
இதற்காக தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் எம்.பி.அலுவலகங்களை திறக்க உள்ளார். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெறும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் பாலோ அப்களுக்காக நன்கு படித்த அறிவுசார்ந்த இளைஞர்களை பணியமர்த்தப் போகிறாராம்.

குறை தீர்ப்பு
மேலும் கணிணி மூலம் மக்கள் குறைகளை பதிவு செய்து அதில் தீர்வு கண்டது, தீர்வு காணவேண்டியது என அத்தனை தரவுகளையும் பதிவு செய்யவும் ஆட்களை இறக்கியுள்ளாராம். கட்சியினரை வைத்து இந்த வேலையை பார்க்கச் சொன்னால் சொதப்பி விடுவார்கள்.

தீவிர ஆலோசனை
அவர்கள் கமிஷன் அது இதுவென்று மக்கள் பணிகளில் தொய்வு காட்டுவார்கள் என தந்தையிடம் கூறிவிட்டாராம் ரவிந்தரநாத். அதனால் கிடைத்ததை கெட்டியாக பிடுத்துக்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இப்போதே ரூம் போட்டு யோசித்து வருகிறார் அவர். எது எப்படியோ அதன் மூலம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications