தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல சேதி வருமா.. 36 மணி நேர உண்ணாவிரதத்தை கையிலெடுத்த சத்துணவு பணியாளர்கள்
தேனி: இன்றும் நாளையும் மொத்தம் 36 மணி நேரம், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை சத்துணவு பணியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். என்ன காரணம்?
காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

போராட்டம்: இதுதொடர்பான போராட்டங்களையும், அச்சங்கத்தினர் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர்.. இந்நிலையில், மீண்டும் போராட்டத்தை நடத்த போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவருகிறோம்.
காலமுறை ஊதியம்: பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தில் சத்துணவுப்பணியாளர்களை கொண்டு செயல்படுத்தவும், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்கவும், கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்..
அடுத்ததாக சென்னை சமூக நலன், மகளிர் உரிமைத்துறை இயக்குனர் அலுவலகம் முன் செப்டம்பர் 29,30ல் 36 மணி நேர உண்ணாவிரதம் நடத்த உள்ளோம். ... டிசம்பர் முதல் அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்.

கோரிக்கைகள்: தங்கள் கோரிக்கைகள் எதையுமே மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.. அதேபோல, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி இன்று, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியை அறிவித்துள்ளது..
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆசிரியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தர உள்ளனர். இப்போது, சத்துணவு துறையும் போராட்டத்தில் இறங்கி உள்ளது, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications