தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல சேதி வருமா.. 36 மணி நேர உண்ணாவிரதத்தை கையிலெடுத்த சத்துணவு பணியாளர்கள்
தேனி: இன்றும் நாளையும் மொத்தம் 36 மணி நேரம், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை சத்துணவு பணியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். என்ன காரணம்?
காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

போராட்டம்: இதுதொடர்பான போராட்டங்களையும், அச்சங்கத்தினர் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர்.. இந்நிலையில், மீண்டும் போராட்டத்தை நடத்த போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவருகிறோம்.
காலமுறை ஊதியம்: பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தில் சத்துணவுப்பணியாளர்களை கொண்டு செயல்படுத்தவும், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்கவும், கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்..
அடுத்ததாக சென்னை சமூக நலன், மகளிர் உரிமைத்துறை இயக்குனர் அலுவலகம் முன் செப்டம்பர் 29,30ல் 36 மணி நேர உண்ணாவிரதம் நடத்த உள்ளோம். ... டிசம்பர் முதல் அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்.

கோரிக்கைகள்: தங்கள் கோரிக்கைகள் எதையுமே மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.. அதேபோல, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி இன்று, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியை அறிவித்துள்ளது..
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆசிரியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தர உள்ளனர். இப்போது, சத்துணவு துறையும் போராட்டத்தில் இறங்கி உள்ளது, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications