தமிழகத்தில் சில பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு என்ன காரணம்.. அதிகாரிகள் விளக்கம்
தேனி: கோடை வெயில் சுட்டெரித்து வருவது ஒருபுறம் எனில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சென்னை, கோவை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் திடீரென ஏற்படும் மின்வெட்டு காரணமாக மக்கள் பரிதவிக்கிறார்கள். இதனிடையே இந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோடை வெயில் தமிழ்நாட்டில் கடுமையாக தாக்கி வந்த நிலையில், தற்போது தான் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதேநேரம் வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் எனில், மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கிறது. இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. பலரும் வீடுகளில் இரண்டு ஏசி, மூன்று ஏசி என பயன்படுத்த தொடங்கியதால் சென்னை நகரம் உச்சக்கட்ட மின்சார தேவையால் திணறி வருகிறது.. அதிகப்படியான மின் தேவையால் மின் சாதனங்கள் மட்டுமின்றி மின்வாரிய ஊழியர்களுமே சோர்ந்து போய் உள்ளார்கள்.

மின்விசிறி 10 நிமிடம் ஓடாமல் போனாலே மக்கள் பதறும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. மின்வெட்டு ஏற்பட்டால் மக்கள் இப்போது எல்லாம் பொறுமையாக இருக்க முடியாத நிலை இருப்பதே காரணம் ஆகும். ஏனெனில் வெயிலின் தாக்கம் அந்த அளவிற்கு ஆபத்தானதாக இருக்கிறது.
இதனியே வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் மின் தேவை 20,701 மெகாவாட் ஆகவும், மின்நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்டுகளாக பதிவானது. ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மே 2ம் தேதி ஒரே நாளில் 20,830 மெகா வாட் மின் தேவை இருந்தது. சென்னையில் மட்டுமே 4500 மெகாவாட் அளவிற்கு தினசரி மின்தேவை இருக்கிறது. அதிகபட்ச மின் தேவை ஒரு பக்கம் இருந்தாலும் மின்விநியோகம் தமிழகத்தில் சீராகவே உள்ளது.
தமிழகத்தில் தேனி, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, கோவை உள்பட பகுதிகளில் மழை பெய்த போதிலும் கடந்த வார ஒரு வாரமாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இந்த மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, கடந்த 3 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதேநேரம் மின் கம்பங்களில் ஏற்படும் திடீர் பழுதுகள், டிரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் பழுதுகளால் மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறினார்கள்.
அப்படி ஏற்படும் பழுதுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக கூறிய அதிகாரிகள், தற்போது மழை காரணமாக மின்சார வயர்கள் மரங்களில் சிக்கி பழுது ஏற்படுவதாக கூறினார்கள். அப்படி மரங்களில் சிக்கிய மின்வயர்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்வயர்களை சரி செய்யும் பணிக்காகவே மின்சாரம் சிறிது நேரங்கள் அவ்வப்போது துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications