தேனியில் ஆட்டோவில் சென்ற ஆசிரியை.. கழுத்தில் தங்க நகை.. சலனமான டிரைவருக்கு பெரிய ட்விஸ்ட்
தேனி: தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்கா பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் தேனி-மதுரை சாலையில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ஆட்டோவில் சென்றார்.. ஆனால் அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் மாற்று வழியாக செல்வதாக கூறி தேனி-பெரியகுளம் சாலை தென்றல் நகர் பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி மூதாட்டியை மிரட்டி 9 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார்.
ஆட்டோவில் ஏறி செல்லும் போது, மிக அபூர்வமாக சில நேரங்களில் கற்பனை கூட செய்யாத சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆட்டோ ஓட்டும் பலரும் பயணியைமிரட்டி பணம் பறித்து, அத்துமீறுவது போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். ஆட்டோவில் ஏறும் பயணிகளை பத்திரமாக கொண்டு போய் இறக்கிவிடுவார்கள். அவர்கள் பை, பணத்தை மறந்தாலும் எடுத்து கொடுத்துவிடுவார்கள்.

சிலர் நகைகளை பறிப்பார்கள்
பலர் மிகவும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கயவர்கள் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டுவார்கள். தனியாக செல்லும்பெண் அல்லது மூதாட்டியை மிரட்டி பணம் பறிப்பார்கள். நகை அணிந்திருந்தால் கத்தியைகாட்டி மிரட்டி நகைகளை கழட்டி தர சொல்லி கேட்பார்கள். அது மிக அபூர்வமாகவே நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தேனியில் நடந்துள்ளது.
ஆட்டோவில் ஏறினார்
தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்கா பகுதியை சேர்ந்த 56 வயதாகும் ஜான் இருதயராஜ் வசிக்கிறார். இவரது தாய் முனியம்மாளுக்கு 85 வயது ஆகிறது. இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். தேனி கொண்டுராஜா லைனில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 5-ந்தேதி தேனி-மதுரை சாலையில் நடந்த ஜெப கூட்டத்தில் முனியம்மாள் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் தோசை வாங்கி கேட்டார். அப்போது தான் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தார்.
தோசை வாங்கிய பின்பு ஆட்டோவில் புறப்பட்டார். ஆனால் ஆட்டோ டிரைவர் மாற்று வழியாக செல்வதாக கூறி தேனி-பெரியகுளம் சாலை தென்றல் நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு ஆட்டோவை நிறுத்தி மூதாட்டியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலியை பறித்துள்ளாராம். தொடர்ந்து முனியம்மாளிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து மூதாட்டியை சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
டிரைவர் கைது
தனது தாயார் முனியம்மாளுக்கு நடந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஜான் இருதயராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது தேனி தீயணைப்பு நிலைய ஓடைத்தெரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications