Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை நடுநடுங்க கையெழுத்து... ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற 90 வயது மூதாட்டி..!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

Recommended Video

    தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவி.. ‘பெருமை’ சேர்த்த 90 வயது பெருமாத்தாள்

    இவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் அவரது பேரன், பேத்திகள் மற்றும் ஊர்க்காரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

    பதவியேற்பு படிவத்தில் கைநாட்டு தான் வைப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கை நடுநடுங்கிய நிலையிலும் பேனாவில் கையெழுத்திட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் பெருமாத்தாள்.

     பதவியேற்பு

    பதவியேற்பு

    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அந்தவகையில் தமிழகத்தின் மூத்த வயதுடைய ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெருமாத்தாள் (90 வயது) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

    அடிப்படை வசதி

    அடிப்படை வசதி

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தவர் பெருமாத்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவந்திப்பட்டி ஊராட்சியில் பதிவான மொத்த வாக்குகள் இரண்டாயிரத்து 60-ல் ஆயிரத்து 568 ஓட்டுக்களை பெற்று அபார வெற்றி பெற்றார் பெருமாத்தாள். ஊர் மக்களுக்கு எப்போதும் நல்லதே நினைக்கும் தன்னை ஊர்க்காரர்கள் தான் வெற்றி பெற வைத்துள்ளதாகவும் சிவந்திப்பட்டிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தாம் செய்து கொடுப்பேன் எனவும் தெரிவிக்கிறார் பெருமாத்தாள்.

    பாராட்டு பத்திரம்

    பாராட்டு பத்திரம்

    தேர்தலில் பெருமாத்தாள் பாட்டி முதல் முறையாக வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவரது குடும்பத்தினர் தான் இதற்கு முன்னர் 7 முறை ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாத்தாள் பாட்டி குறித்து கூறும் சிவந்திப்பட்டி ஊர்க்காரர் ஒருவர், அவர் பார்க்கத்தான் வயதானவரே தவிர செயல்பாடுகள் அனைத்தும் இளசுகளை மிஞ்சும் வகையில் இருக்கும் என பாராட்டு பத்திரம் கொடுக்கிறார்.

    ஊர் வேலை

    ஊர் வேலை

    90 வயதிலும் ஓடி ஆடி வீட்டு வேலை, தோட்ட வேலை என கவனித்து வரும் பெருமாத்தாள் பாட்டி இனி ஊர் வேலையையும் பார்க்க இருக்கிறார். விரைவில் இவர் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிவந்திப்பட்டிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை பட்டியலை அளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+