Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தம்பியின் அந்த ஒரு பதிலுக்காகதான் நான் இங்கு வந்தேன்! நாங்குநேரி சின்னத்துரையை சந்தித்த தாடி பாலாஜி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை சாதிய கொடுமையால் தாக்கப்பட்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த நாங்குநேரி மாணவன் சின்னத்துரையை நடிகர் தாடி பாலாஜி சந்தித்து பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவருடைய தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை கொடுமையால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

Actor Thaadi Balaji praises Nanguneri Chinnadurai who got 469 marks

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று பாடம் எடுத்தனர். அதன்படி மருத்துவமனையில் இருந்து கொண்டே உதவியாளரின் உதவியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார் சின்னதுரை.

இவர்களது குடும்பம் நாங்குநேரியில் வசித்து வந்த நிலையில் பாதுகாப்பு இருக்காது என முறையிட்டதால் நாங்குநேரியில் உள்ள அம்பேத்கர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றிய சின்னத்துரையின் தாயார் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.

அவர்களது படிப்பு செலவை தமிழக அரசு ஏற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் சின்னதுரை 600க்கு 469 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, கணினி பயன்பாடு-94, கணக்குப்பதிவியல்-85, பொருளாதாரம்-84 வீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.

அவரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தனர். இதுகுறித்து சின்னத்துரை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆசிரியர்கள் நேரில் வந்து பாடங்களை கற்றுக் கொடுத்தனர்.

மருத்துவமனையில் இருந்தபடியே தேர்வையும் எழுதி முடித்தேன். பி.காம் படித்துவிட்டு சி.ஏ. படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். அப்போது சின்னத்துரையிடம் செய்தியாளர்கள், நீங்கள் சில பேரால் பாதிக்கப்பட்டிருக்கீங்க, அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என கேட்டனர். அதற்கு சின்னத்துரை" அவர்களும் என்னை மாதிரி படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

இந்த நிலையில் சின்னத்துரையை தாடி பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார். அப்போது தாடி பாலாஜி கூறுகையில் சின்னத்துரை பல தடைகளை கடந்து பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார். அவர் முதல்வரை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சின்னத்துரை சொன்ன பதிலால்தான் நான் இங்கு வந்து அவரை சந்திக்கிறேன். நிருபர் ஒருவர் நீங்கள் சில பேரால் பாதிக்கப்பட்டிருக்கீங்க, அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என கேட்டனர். அதற்கு சின்னத்துரை" அவர்களும் என்னை மாதிரி படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

முதல்வரும் சின்னத்துரையின் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி அவருக்கோ அவருடைய தங்கையின் படிப்புக்கோ எந்த உதவி தேவைப்பட்டாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+