புளியோதரை பஞ்சாயத்தே முடியலை.. அதிமுக மாநாட்டுக்கு 50 பவுனுடன் போன மனைவியை காணலையாம்- கணவன் கதறல்!
திருநெல்வேலி: மதுரை அதிமுக மாநாட்டு சென்ற மனைவி இன்னமும் வீடு திரும்பவில்லை என திருநெல்வேலி போலீசில் ராதாபுரம் ஜேசுபாதம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரையில் முதல் முறையாக பிரம்மாண்ட மாநாடு ஆகஸ்ட் 20-ந் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அதிமுக மதுரை மாநாடு மூலம், அக்கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான்; அவருக்கு பின்னால்தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்பதை நிரூபித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக சிதறவில்லை- சிதையவில்லை; முழு பலத்துடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மதுரை மாநாடு அமைந்தது என்கின்றனர். அதேநேரத்தில் மதுரை மாநாட்டில் டன் கணக்கில் சாப்பாடு வீணானது உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ராதாபுரம் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த ஜேசுபாதம் என்பவர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மனுவில் ஜேசுபாதம் கூறியிருப்பதாவது: என் மனைவி தங்க செல்வம், அதிமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு 200 பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளேன். 18 வயதில் மகளும் 17 வயதில் மகனும் இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதியன்று மதுரை மாநாட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார் தங்க செல்வம். ஆனால் இப்போது வரை மனைவி தங்க செல்வம் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீதுதான் சந்தேகம் உள்ளது. அவர்தான் என் மனைவியை லாட்ஜில் கடத்தி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம். என் மனைவி, மதுரை மாநாட்டுக்கு செல்லும் போது 50 பவுன் நகையும் அணிந்திருந்தார். அவரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு ஜேசுபாதம் தமது மனுவில் கூறியிருந்தார்.
ஜேசுபாதத்தின் இந்த மனு மீது நெல்லை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications