புளியோதரை பஞ்சாயத்தே முடியலை.. அதிமுக மாநாட்டுக்கு 50 பவுனுடன் போன மனைவியை காணலையாம்- கணவன் கதறல்!
திருநெல்வேலி: மதுரை அதிமுக மாநாட்டு சென்ற மனைவி இன்னமும் வீடு திரும்பவில்லை என திருநெல்வேலி போலீசில் ராதாபுரம் ஜேசுபாதம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரையில் முதல் முறையாக பிரம்மாண்ட மாநாடு ஆகஸ்ட் 20-ந் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அதிமுக மதுரை மாநாடு மூலம், அக்கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான்; அவருக்கு பின்னால்தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்பதை நிரூபித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக சிதறவில்லை- சிதையவில்லை; முழு பலத்துடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மதுரை மாநாடு அமைந்தது என்கின்றனர். அதேநேரத்தில் மதுரை மாநாட்டில் டன் கணக்கில் சாப்பாடு வீணானது உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ராதாபுரம் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த ஜேசுபாதம் என்பவர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மனுவில் ஜேசுபாதம் கூறியிருப்பதாவது: என் மனைவி தங்க செல்வம், அதிமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு 200 பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளேன். 18 வயதில் மகளும் 17 வயதில் மகனும் இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதியன்று மதுரை மாநாட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார் தங்க செல்வம். ஆனால் இப்போது வரை மனைவி தங்க செல்வம் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீதுதான் சந்தேகம் உள்ளது. அவர்தான் என் மனைவியை லாட்ஜில் கடத்தி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம். என் மனைவி, மதுரை மாநாட்டுக்கு செல்லும் போது 50 பவுன் நகையும் அணிந்திருந்தார். அவரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு ஜேசுபாதம் தமது மனுவில் கூறியிருந்தார்.
ஜேசுபாதத்தின் இந்த மனு மீது நெல்லை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications