நெல்லை, தென்காசி பகுதிகளில் நில அதிர்வு? பகல் 12 மணிக்கு குலுங்கிய வீடுகள்! அலறி ஓடிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், தென்காசியின் சில பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும் அதே போல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்ளிலும் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

tenkasi tirunelveli tremor

சரியாக இன்று பகல் 12 மணி அளவில் வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கூறுகையில் நெல்லையில் சில பகுதிகளில் நில அதிர்வுகள் இருந்தால் நில நடுக்க ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும். ஆணால் இதுவரை அது போன்ற தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வால் யாருக்கும் காயங்களோ பொருட் சேதமோ ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+