ஃபைன் இன்றி மின்கட்டணம் செலுத்தலாம்.. அவகாசம் நீட்டிப்பு! நெல்லை, தூத்துக்குடி மக்களே நோட் பண்ணுங்க
திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்துவதற்கான தேதி என்பது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில் 2 நாட்களும் மழை என்பது இடைவிடாது கொட்டித்தீர்த்தது.

இதனால் 4 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மேலும் சிலர் மழை வெள்ளத்தால் இறந்தனர். கால்நடைகள் செத்துப்போயின. வீடுகள் சில இடங்களில் இடிந்தது.
இதையடுத்து தமிழக அரசு, மத்திய அரசு இணைந்து செயல்பட்டு மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது இரு மாவட்டங்களிலும் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையே தான் வெள்ளம் பாதித்த மக்களுக்காக தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக வெள்ளம் பாதித்த கிராமங்களை சேர்ந்த ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூ.6 ஆயிரமும், குறைந்த அளவில் வெள்ளம் பாதித்த கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000ம் நிவாரணமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை புதிதாக மக்களுக்கு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில் வெள்ளத்தால் அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது 2ம் தேதியும் நெருங்கி வரும் சூழலில் மக்களுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்துவதற்கான தேதியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நீட்டிப்பு செய்துள்ளார். அதன்படி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபாராதம் இன்றி செலுத்துவதற்கான காலஅவகாசம் 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை நெல்லை, தூத்துக்குடி மக்கள் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications