கொரோனாவுக்கு கிரகங்களே காரணமாம்.. 18 மாதங்கள் தரணி தட்சா யாகம் நடத்தினால் ஒழிக்கலாமாம்!
திருநெல்வேலி: உலகை அழித்து வரும் கொரோனாவுக்கு காரணமே கிரகங்களின் சேர்க்கைதான்; ஆகையால் 18 மாதங்கள் தரணி தட்சா யாகம் நடத்தினால் கொரோனாவை ஒழித்துவிடலாம் என கேரளா ஜோதிடர் சூர்யன் நம்பூதிரி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள ஸ்ரீ சூர்யமங்கலம் அத்வைத வேத வித்யா பீடாதியான சூர்யன் நம்பூதிரி சுவாமிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மஹா ப்ரவர்ஜியா யோகம்
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்று சேர்ந்தால் அதற்கு ப்ரவர்ஜியா யோகம் என பெயர். அதிலும் வியாழனும் , சனியும் சேர்ந்திருந்தால் மஹா ப்ரவர்ஜியா யோகம். இந்த யோகம் உலகிற்கு தீங்கானது. அத்துடன் 6 மாதங்களுக்கு இடையே இரண்டு சூரிய கிரகணங்கள் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் உலக நன்மைக்கு எதிரானது. பேரழிவுகளை ஏற்படுத்தும்.

தரணி தட்சா யாகம்
இதன் விளைவாகதான் கண்ணுக்கு தெரியாத கிருமியோடு போராடுகின்றோம் .இந்த நிலையை மாற்றி உலக வாழ் மனிதர்கள் நலம் பெற தரணி தட்சா யாகம் நடத்த வேண்டும் இது சாதி, மத அடிப்படையில் இல்லை. உலகத்தில் உள்ள நோய் தொற்றால் மனிதர்கள் மடிவதை தடுக்கவும் , மனித உயிர்களை காக்கவும் நடத்தப்படுகின்றது இந்த யாகம் .

3 கட்டங்களாக யாகங்கள்
மொத்தம் 18 மாதங்கள் இந்த யாகம் நடத்த வேண்டும். இதன்படி வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி எங்கள் மடத்திலே தொடங்க உள்ளோம். அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகள், விதிமுறைகளை கடைபிடித்து யாகம் நடத்துகிறோம். முதல் 8 மாதங்கள் தொடர்ச்சியாகவும் அடுத்து அடுத்து 5 மாதங்களாகவும் யாகங்கள் நடத்தப்படும்.

அனைவரும் நடத்த வேண்டும்
இந்த தரணி ரட்சா யாகம் முழுவதும் எங்களால் தனியே நடத்த முடியாது. ஆகையால் அனைவரும் இதில் இனைய வேண்டும் . இதன் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே மத்திய , மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் எந்த பதிலும் இல்லை.இருந்த போதிலும் உலக நன்மைக்காக இந்த யாகத்தை இணைந்து நடத்தி கொடிய கிருமியை சம்காரம் செய்வோம். இவ்வாறு சூர்யன் நம்பூதிரி சுவாமிகள் கூறினார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications