பக்ரீத் பண்டிகை! ஆட்டின் விலை ரூ 70 ஆயிரமா? அதென்ன கோங்கு ரகம்? மேலப்பாளையத்தில் கடும் போட்டி
நெல்லை: பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையத்தில் கோங்கு ரக ஆட்டை ரூ 70 ஆயிரம் கொடுத்து வாங்க கடும் போட்டி நிலவியது. அது மட்டுமல்லாமல் ஆட்டு சந்தையில் ரூ 8 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
முஸ்லீம் சகோதர, சகோதரிகள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது ஏழைகளுக்கு தங்கள் வசதிக்கேற்ப இறைச்சியை தானமாக வழங்குவர்.

இந்த பண்டிகையையொட்டி ஆடு, மாடுகளை வெட்டி, அதன் கறியை 3 பங்குகளாக பிரிப்பர், முதல் பங்கு தமது குடும்பத்தினருக்கும், 2ஆவது பங்கு உறவினர்களுக்கும், 3ஆவது பங்கு ஏழை எளியவர்களுக்கும் கொடுக்கப்படுவது வழக்கம்.
இஸ்லாமியர்களின் வழக்கப்படி இதை குர்பானி என்பார்கள். இந்த குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்க நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் சந்தைக்கு ஏராளமானோர் கடந்த செவ்வாய்கிழமை வருகை தந்தனர். தென் மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை நடக்கும்.
இந்த சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். இந்த வகையில் இந்த பக்ரீத் பண்டிகையையொட்டியும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த மேலப்பாளையம் சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ 2 ஆயிரம் முதலும் சில ஆடுகள் ரூ 30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டன. செம்மறி ஆடுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.
அது போல் அங்கு கோழிகள், கருவாடு விற்பனையும் இருந்தது. எடைக்கு ஏற்ப ஆடுகளின் விலையை வியாபாரிகள் நிர்ணயம் செய்தனர். அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ 80 ஆயிரத்திற்கு விற்பனையானது. மதுரையை சேர்ந்த கிரி என்பவரின் ஆடுகள் ரூ 60 ஆயிரம் மற்றும் ரூ 70 ஆயிரத்திற்கு விலை போனது.
மூன்றரை அடி மட்டுமே உயரம் கொண்ட கோங்கு வகை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆடுகள் ரூ 60 ஆயிரம் முதல் ரூ 70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. மேலப்பாளையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
கடையத்தில் ரூ 1 கோடிக்கு விற்பனை நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கோங்கு ஆடுகள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவை. இது தோற்றத்தில் நாட்டு ஆடுகளை விட அதிக எடை கொண்டு வளரும். ஒரு வயது கோங்கு ஆட்டின் உடல் எடை 2 வயது நாட்டு ஆட்டின் எடைக்கு சமமாக இருக்கும்.
இந்த ஆட்டின் முகம் வளைவாகவும் காதுகள் பெரியதாகவும் இருக்கும். இது தட்பவெப்பநிலையை தாங்காமல் இதன் குட்டிகள் இறக்க வாய்ப்பிருக்கிறது. இதுதான் இதில் உள்ள மைனஸ். இதை எல்லாம் தாண்டி இதை வளர்த்தோமேயானால் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆட்டுக் குட்டியின் விலை கர்நாடகாவில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் போதுதான் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களால் அதன் விலை அதிகரிக்கப்படுகிறது. நல்ல போஷாக்கான உணவளித்தால் ஒரு ஆடு 4 ஆண்டில் 100 கிலோ கூட எடை அதிகரிக்கும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications