நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்.. ஜூலை 8 இல் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலி: பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோவிலும், திருநெல்வேலி அல்வாவும் தான். நெல்லையப்பர் கோவில் தோரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 8 ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையையொட்டி ஜூலை 8 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜூலை 19 ஆம் தேதி பணி நாளாக நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications