Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூடு விழா காணும் மாஞ்சோலை ரஸ்க்! இது எப்படி பிரபலமானது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்த மாஞ்சோலை எஸ்டேட்டின் அடையாளமாக இருந்து வந்த ரஸ்க் பேக்கரி விரைவில் மூடு விழா காண உள்ளது.

இப்போதும் 80களில் இருந்த ஒரு கிராமத்தைப் போல காட்சி தருகிறது மாஞ்சோலை எஸ்டேட். எப்போதோ வந்து போகும் ஒரே ஒரு சாலை, கூட்ட நெரிசல் இல்லாமல் அநாதையாகக் காட்சியளிக்கும் பஸ் ஸ்டாப், சின்னதாக ஒரு டீக்கடை, எந்தவித நவீன வசதியும் இல்லாத கருங்கல் கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு பழைய போஸ்ட் ஆபீஸ், கொஞ்சம் கூட நஞ்சு இல்லாமல் வீசும் தூய்மையான காற்று என இந்தக் கிராமத்தின் அழகே அப்படியே அள்ளுகிறது.

Manjolai Estate Tirunelveli

மாஞ்சோலை எஸ்டேட் என்றது பலருக்கும் 1999 நடைபெற்ற கூலி உயர்வு கேட்டு நடத்திய போராட்டம்தான் நினைவுக்கு வரும். வெறும் 70 ரூபாயாக இருந்த கூலியை 100 ரூபாயாக மாற்ற வேண்டும் என்று இந்த எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்த கூலித் தொழிலாளர்கள் போராடினர். இதே ஆண்டு ஜூலை மாதம் 23ஆ,ம் தேதி திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அந்தக் கூட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறை தடியடி நடத்தியது.

ஆற்றுப் பாலத்தின் நடுவே சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் எப்படித் தப்பிப்பது என்பது புரியாமல் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இதில் 17 பேர் உயிர் பரிதாபமாகப் பறிபோனது. இந்தப் படுகொலைக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Manjolai Estate Tirunelveli

சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை சிங்கப்பட்டி ஜமீனின் 32வது ஜமீன்தார் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி.) என்ற கம்பெனிக்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார். 1863களில் இந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் லிமிட்டட் தொடங்கப்பட்டது. முதலில் இந்த கம்பெனி பர்மாவிலிருந்து மரங்களைக் கொண்டுவந்து வர்த்தகம் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தது.

பின்னர் 1913 வாக்கில் தேயிலை உற்பத்தியில் இறங்கியது. இந்நிறுவனம் அதற்காகத் தொடக்கக்காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களை வாங்கியது. அதனை அடுத்து மணிமுத்தாறுக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிக அழகான தேயிலைத் தோட்டமான மாஞ்சோலை வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து குத்தகைக்கு வாங்கியது. 1920களில் இந்தத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கப்பட்டது.

இதற்கு 'சிங்கம்பட்டி க்ரூப் ஆஃப் எஸ்டேட்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள்தான் கூலி உயர்வு கேட்டுப் போராடினர். திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் சாம்ராஜ்யம் குத்தகை காலம் முடிந்ததால், இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

அந்த மலைப்பகுதி தொழிலாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் இன்னும் 3 மாதங்களில் முழுவதுமாக எஸ்டேட் மூடப்பட்டு உள்ளது. இது பற்றி, இங்கே மூன்று தலைமுறைகளாக வேலை பார்த்து வந்த ஒருவர் பேசியபோது, "மாஞ்சோலை எஸ்டேட் என்பது மொத்தம் 18 தேயிலை காடுகளாகப் பிரித்துள்ளது. எந்தக் காட்டில் தேயிலையில் கொழுந்து தளிர்க்கிறதோ அங்கே தோட்டத் தொழிலாளர்கள் போய் தேயிலை பறிப்பார்கள். அங்கே வேலை முடிந்ததும் அடுத்த காட்டுக்குப் போய் பறிப்பார்கள். இதுதான் இங்கே முக்கிய தொழில். கடந்த 2 மாதங்களாகத் தேயிலை பறிப்பது நின்றுவிட்டது. எனவே காடு முழுக்க புதர் போல் மாறிவிட்டது" என்கிறார்

Manjolai Estate Tirunelveli

"இங்கே உள்ள மக்களைப் போல உழைப்பாளிகளை வேறு எங்கேயும் பார்க்கவே முடியாது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்த வேலைக்குப் போனாலும் 800 ரூபாய்க்கு கீழ் சம்பள ஆள் கிடைப்பது கஷ்டம். இங்கே வெறும் 450 ரூபாய்தான் சம்பளம். இந்தக் குறைந்த கூலியை வைத்து பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறார்கள் என்றால் அது மாஞ்சோலை தொழிலாளர்களின் திறமை என்றுதான் சொல்வேன்.

1990களுக்கு முன்பு 15 ஆயிரம் பேர் இருந்தார்கள். காய்கறி கூட வெளியே வாங்க வேண்டிய தேவை இருக்காது. வீட்டுக்கு முன்பே விளைவித்து விடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆட்கள் குறைந்து போய்விட்டனர். இனி எங்களால் மலைக்குக் கீழே போனால் கூட என்ன வேலை செய்வது என்று புரியவில்லை" என்கிறார்.

மாஞ்சோலை என்றாலே ரஸ்க் பிஸ்கெட் மிகவும் பிரபலம். சென்னை வர அதன் தரத்திற்கு ஒரு பெயர் உண்டு. எஸ்டேட்டையே மூடிவிட்டார்கள். அதன்பின்னர் நாங்கள் யாருக்காக ரஸ்க் தயாரிக்கப் போகிறோம் என்கிறார் அதன் உரிமையாளர். "கடந்த 45 வருஷமாக நான் இந்த ரஸ்க் தொழிலை நடத்தி வருகிறேன். எனக்கு முன்பாக வேறு ஒரு தலைமுறை ஆட்கள் நடத்தினார்கள். ஒரு நாளைக்கு 35 கிலோ ரஸ்க் தயாரிப்போம். உடனடியாக விற்பனையாகிவிடும். மே மாதம்தான் சீசன். நிறையச் சுற்றுலாவாசிகள் வருவார்கள். எங்களால் கொடுக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். காலை 6 மணிக்கு வேலை ஆரம்பித்தால் மாலை 5 மணி வரை ஆகும்.

எங்கள் ரஸ்க் மெட்ராஸ், பாம்பே, கோயமுத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கேரளா எனப் பல இடங்களிலிருந்து ரஸ்க் வாங்குவதற்காகவே வருகிறார்கள். ஒரு கிலோ ரஸ்க் 300 ரூபாய். இந்த எஸ்டேட் மூடிவிட்டார்கள். ஆகவே இப்போது எங்கள் கடையை மலைக்குக் கீழே மாற்ற முடிவு செய்துள்ளோம்"என்கிறார் இந்தப் பெரியவர்.

இவருக்குப் பின் இவரது பேரன் கடையை நடத்தி வருகிறார். மாஞ்சோலை ரஸ்க் மூன்று மாதம் வரைகூட வைத்துச் சாப்பிடலாம். அது கெட்டே போகாது. ஏனென்றால் தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் ரஸ்க் இது. இதேபோல இங்கே தயாரிக்கப்படும் பட்டணம் பொடியும் மிகப் பிரபலம். பலர் கிலோ கணக்கில் வாங்கிப்போகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+