கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்.. அசத்தும் திருநெல்வேலி போலீஸ்
திருநெல்வேலி: திருநெல்வேலி காவல்துறையினர் மற்றும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எத்தகைய உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து பதாகைகள் அனைத்து காவல்நிலைங்களிலும் , மாநகரின் முக்கிய இடங்களிலும் அமைத்து வருகிறார்கள் எனறு திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி காவல்துறையும் மக்களிடம் அரசின் அறிவுறுத்தல்களை கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எத்தகைய உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து பதாகைகள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வைத்து வருகிறார்கள்.
அந்த பதாகையில் இடம் பெற்றுள்ள உணவு விவரங்கள் பின்வருமாறு:
திரவ உணவுகள்
- இளநீர்
- மோர்
- பசும்பால்
- பழ ஜுஸ்
- 3லிட்டர் தண்ணீர்
பழங்கள்
- ஆரஞ்சு
- எழுமிச்சை
- அண்ணாச்சி
- பப்பாளி
- கொய்யா
- சாத்துக்குடி
மூலிகைகள்
- வேப்பிலை
- வெற்றிலை
- தூதுவளை
- கற்பூரவள்ளி
- துளசி
- முடக்கத்ன் கீரை
- முருங்கை கீரை
"உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் ரஜினி சார்.." கடலூர் மாணவரின் தந்தை உருக்கமான வீடியோ
காய்கறிகள்
- பீட்ரூட்
- முட்டைகோஸ்
- குடை மிளகாய்
- கேரட்
- இஞ்சி
- காலிஃபிளவர்
- மஞ்சள்
- பூண்டு
- கத்தரிக்காய்