பிக்கப் வண்டியில் காய் வாங்கப் போன வியாபாரியிடம் ரூ. 1.24 லட்சம் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி!
Recommended Video
நெல்லை: நெல்லை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆங்காங்கே பறக்கும் படை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை பகுதியில் சமூக நலத் திட்ட வட்டாட்சியர் வெற்றிச்செல்வி தலைமையில் நடந்த வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சுரண்டைக்கு பிக்கப் வாகனத்தில் காய்கறிகள் மொத்தமாக வாங்க வியாபாரி நாசர் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது, உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டதாக ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரியக் கணக்கைக் காட்டி பணத்தைப் பெற்றுச் செல்ல அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.