பொருநை அருங்காட்சியகம்.. பாறையில் "ராம்" என இந்தியில் எழுதிய வடமாநிலத்தவர்.. அடுத்து நடந்த சம்பவம்!
நெல்லை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பாறையில் ராம் என்று இந்தியில் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை வைத்தே இந்தி பெயர் அழிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில் ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருநை அருங்காட்சியகத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அருள்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

பொருநை அருங்காட்சியகத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், நேற்றிரவு அலங்காரம் செய்யப்பட்டு மின்னியது. இதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரையில் கீழடி அருங்காட்சியம் அமைக்கப்பட்டதை போல் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2023ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பாறை ஒன்றில் இந்தி எழுத்துக்களால் ராம் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, பொருநை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய வடமாநில ஊழியர் இந்தியில் ராம் என்று எழுதி இருப்பது தெரிய வந்துள்ளது. அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பாறையில் வடமாநில ஊழியர் எழுதியது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் வடமாநிலத்தவரை கொண்டே ராம் என்று இந்தியில் எழுதப்பட்ட எழுத்துக்களை தமிழக அரசு அதிகாரிகள் அழிக்க வைத்துள்ளனர். பெயிண்ட் அடிக்கும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். இந்த அருங்காட்சியகம் கட்டுமான பணிகளிலும் 80 சதவிகிதம் வடமாநிலத்தவரே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications