தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்
நெல்லை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் நெல்லையில் காலமானார்.
இது தொடர்பாக புலவர் செந்தலை கவுதமன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தென்காசி - கடையம் நகர இல்லத்தில் பேராசிரியர் அறிவரசனார், புதன்கிழமை இரவு 7.00மணிக்கு மீளா விடைபெற்றார். ஆழ்வார்குறிச்சிக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் ஓய்வு பெற்றவர். இயற்பெயர் குமாரசாமி.
ஈழம் சென்று போர்ச்சூழலுக்கு நடுவே ஈராண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றித் தமிழாசிரியர் பலரை உருவாக்கி மீண்டவர் ; தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனிக்கும் ஆசிரியர். தேசியத் தலைவர் அணிவித்த மோதிரம் அவர் விரலில்! தமிழீழத்தாகம் நெஞ்சில்!
ஈழத்தில் வாழ்ந்த நினைவுகளை ' ஈழத்தில் இரண்டாண்டுகள் வாழ்ந்தேன் ' எனும் நூலாக எழுதியுள்ளார். நூலைச் சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மீனாட்சிபுரம் மத மாற்றத்தை ' விடுதலைபுரம் ' என்னும் காப்பியமாகப் பாடியுள்ளார்.
மதமா? மனிதமா? , யார் இந்த இராமன்? , திராவிடர் இயக்க வரலாறு, சோதிடப் புரட்டு - முதலிய நூல்களின் ஆசிரியரான இவர் மார்க்சு, பெரியார், அம்பேத்கார் சிந்தனைகளில் உறுதி காட்டியவர். 'விடுதலை' ,'உண்மை ' இதழ்களின் துணையாசிரியராக முன்பு பணியாற்றியுள்ளார்.
' மக்கள் தாயகம் ' எனும் மாத இதழைக் கடையத்திலிருந்து தொடர்ந்து நடத்தி வந்தார்.கடையம் திருவள்ளுவர்கழகத்தை நிறுவிச் செயல்பட்டு வந்த இவர் , அதன் வெள்ளிவிழாவை அண்மையில் சிறப்புற நடத்தியதோடு , அரிய மலர்ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பிரான்சு, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் சென்று , ஈழஇளையோருக்குத் தமிழ் பயிற்றுவிப்பதைத் தொய்வின்றித் தொடர்ந்து செய்து வந்தார். பேராசிரியர் அறிவரசனார் பெயர் தமிழின எழுச்சி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழ்மீட்புக் களத்தில் வாழ்ந்த அறிவரசனார் புகழ் , உலகத்தமிழர் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
இன்று (5.3.2020) அவர் உடல் , நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இறுதி வணக்கத்துடன் ஒப்படைக்கப்படும். இவ்வாறு செந்தலை கவுதமன் கூறியுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications