தென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்! விவரம்
Recommended Video
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை பார்க்கலாம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அண்மையில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான எல்லைகள் மற்றும் வருவாய் தாலுகாக்கள், கோட்டங்கள் தொடர்பாக அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
புதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் இவை தான்! விவரம்
இதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் (புதியது) ஆகிய இரண்டு கோட்டங்களுடன் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் என எட்டு தாலுகாக்களும் இடம் பெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு கோட்டங்கள் உள்ளது. அத்துடன் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையான்விளை ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெறுகிறது.
இதற்கான அரசாணையை தமிழக அரசின் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.