உள்ளாட்சி அமைப்பு காலிப் பணியிடங்கள் டிஎன்பிசி மூலம் நிரப்படும்- அமைச்சர் கே.என். நேரு தகவல்!
நெல்லை: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள், டி.என்.பி.சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கும் வகையில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவி பறிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில், அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் கே.என் நேரு கூறியவதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள 13 கடற்கரை கிராமத்திற்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் பொன்னன்குறிச்சி தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் உள்ளது. இதற்கு மாற்று திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியின் அரியநாயகபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ஒரு மாதத்தில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
நெல்லை மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை மறு மதிப்பீடு செய்து, திட்டம் தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும். தமிழகம் முழுவதும் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்கள் புற ஆதார அடிப்படையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ரூ.983 கோடியில் மழை நீர் வடிகால் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் ரூ.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வந்தாலும், அதனை முழுமையாக நிறைவு செய்வதில் பல்வேறு சவால்களும், சிக்கல்களும் நிலவி வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications