கோவிலை நிர்வகிப்பதில் மோதல் - கண் இமைப்பதற்குள் வியாபாரியை வெட்டிய மர்ம நபர்.. நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி: காய்கறிகளை சொந்த வாகனத்தில் சந்தைப்படுத்த வந்த வியாபாரியை மர்ம நபர் வெட்டிப் படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள சுப்பையா புரத்தைச் சேர்ந்தவர்
சசிகுமார் (40). இவர் தான் வைத்திருக்கும் லோடு ஆட்டோவில் தனக்கு சொந்தமான காய், கனி சரக்குகள் மற்றும் பிற விவசாயிகளிடம் பெற்ற காய்கனிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி டவுனில் செயல்பட்டுவரும் நைனார் குளம் காய்கறி சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் சசிகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே சரிந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில் சசிகுமாரின் சொந்த ஊரான சுப்பையா புறத்தில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றை நிர்வகிப்பதில் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இதனால் எதிர்தரப்புக்கும் சசிகுமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28 தேதி மானூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே சசிகுமார் வெட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications