கீழே விழுந்துதான் பல் உடைந்தது..லாக்கப்பில் பற்களை உடைக்கவில்லை- அந்தர் பல்டி அடித்த கைதிகள்!
திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் தாக்கி தமக்கு பற்கள் உடையவில்லை; கீழே விழுந்துதான் பற்கள் உடைந்தன என விசாரணை கைதிகள் அந்தர் பல்டி அடித்திருப்பது பரப்ரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்கி விசாரிக்கப்பட்ட பலரும் பற்களை பறிகொடுத்திருக்கின்றனர். அதாவது விசாரணையின் போது கட்டிங் பிளேயர் உள்ளிட்டவை மூலம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்குவது, உடைப்பது என்பதை ஸ்டைலாக வைத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.

இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. ஏஎஸ்பி பல்வீர்சிங் தாக்கி பற்களை இழந்தவர்கள் நாங்கள் என வெளியான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்தை சட்டசபையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சார்-ஆட்சியர் / உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன் என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் சபீர் முகமது ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்கு கைதிகளாக இருந்து சித்ரவதையை அனுபவித்தவர்களும் வந்திருந்தனர். இவ்விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா என்பவர், கீழே விழுந்துதான் பல் உடைந்தது; போலீசார் தாக்கி பற்கள் உடையவில்லை என அந்தர் பல்டி அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூர்யாதான், ஏஎஸ்பி பல்வீர்சிங் தாக்கியே பல் உடைந்தது என போட்டோ ஆதாரத்துடன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications