Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் கல்லூரி மாணவி ராமலட்சுமி.. படுக்கை அறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா என்பவரது மகள் ராமலட்சுமி என்பவர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகளை தர்மராஜா கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி, தவறான முடிவெடுத்துள்ளார். அவர் எடுத்த முடிவு பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளது.

இன்றைய ஜென் தலைமுறை கிட்ஸ்களில் பலர், செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை.. அக்கம் பக்கம் யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதை கூட பார்ப்பது இல்லை. பெற்றோர்களின் பேச்சை மதிப்பது இல்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் கவனிப்பது இல்லை.. ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதும் இல்லை. சின்ன சின்ன ஏமாற்றங்களை கூட சந்திக்காமல் வளர்க்கிறார்கள்.

What happened to a college student in Nellai after her father reprimanded her for using her phone

சிறுவயது முதலே அதிக செல்லம் கொடுத்து குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் எதற்கு எடுத்தாலும் அடம்பிடிப்பது நடக்கிறது. அதேபோல் சிறுசிறு சிக்கல் வந்தாலும் முடங்கிவிடுகிறார்கள். சின்ன சின்ன ஏமாற்றங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் பக்குவம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். தலைமுடியை ஒழுங்காக வெட்டு, நன்றாக படி, நீ நல்ல மார்க் எடுக்கவில்லை என்று கூறுவதை கூட அவமானமாக நினைக்கிறார்கள். பெற்றோர்கள் செல்போன் பார்க்காதே என்று திட்டுவதைகூட மனரீதியாக ஏற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இறுதியாக தவறான முடிவெடுக்கிறார்கள். திருநெல்வேலியில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது

திருநெல்வேலி பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்த 44 வயதாகும் தர்மராஜா பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமிக்கு 18 வயது ஆகியிருந்தது. இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ராமலட்சுமி சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாகவும், இதை அவரது தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனை, தர்மராஜா வாங்கிக்கொண்டு மகளுக்கு அறிவுரை கூறினாராம். இதனால் ராமலட்சுமி விரக்தியில் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் ராமலட்சுமி தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.. அங்கு அவர் திடீரென்று சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார். நேற்று காலையில் அவரது அறை கதவு திறக்காததால் பெற்றோர் சத்தம் கொடுத்தனர். ஆனால் பதில் எதுவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.

அங்கு ராமலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்து, கதவை உடைத்து அறைக்கு சென்றனர். அங்கு ராமலட்சுமியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராமலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+