முள் செடியில் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது இஷானி.. 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

4 வயது சிறுமி கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி கொலை.. விசாரணை தீவிரம்-வீடியோ

    திருவள்ளூர்: 4 வயசு பெண் குழந்தையை நாசம் செய்து முள்ளுசெடியில் வீசப்பட்ட சம்பவத்தில் 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

    4 வயது குழந்தை

    4 வயது குழந்தை

    இவரது 4 வயசு பெண் குழந்தை இஷானி நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானாள். இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.

    ரத்த காயங்கள்

    ரத்த காயங்கள்

    இந்நிலையில், நேற்று காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்த நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    3 பேர் கைது

    3 பேர் கைது

    இது சம்பந்தமான விசாரணையில், சிறுமியை அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மிராசு வயது 25, சந்திரபானு வயசு 60, ஆகிய 2 தொழிலாளர்கள் உட்பட 3 பேர் வெளியே அழைத்து சென்றனர் என்றும், அப்போது அவர்கள் 3 பேருமே மது போதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்றும் சொல்லப்பட்டது.

    முன்னுக்கு பின் முரண்

    முன்னுக்கு பின் முரண்

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் நேற்றிலிருந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஆனால், 3 பேருமே முன்னுக்கு முரணாக பேசி வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. எனினும் விரைவில் குழந்தை இறந்தது குறித்த அனைத்து விவரங்களையும் கண்டுபிடித்துவிடுவோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+