திருவள்ளூர் அருகே திடீர் பதற்றம்-தண்டவாளத்தில் விரிசல்- பொன்னேரியில் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் 1 மணிநேரம் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னை நோக்கி வந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் அண்மையில் பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காயங்களின்றி உயிர் தப்பினர்.

கவரைப்பேட்டை ரயில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த ரயில் விபத்து திட்டமிட்ட நாசவேலையாகவே சந்தேகிக்கப்பட்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
சென்னை நோக்கி வந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் நிலைமை என்னவென்று புரியாமல் தத்தளித்தனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1 மணிநேரத்தில் ரயில்வே தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு பின்னர் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல இயக்கப்பட்டன. ரயில்வே தண்டவாள விரிசல் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications