திருவள்ளூரில் 1605 ஏக்கர் நிலத்தில் டபுள் ரூட்! குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு ரெடியாகுது.. மக்கள் குஷி
திருவள்ளூர்: குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிகிறது.. கிளாம்பாக்கம் போல எந்த பிரச்சனையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் சிஎம்டிஏ அதிகாரிகளும் கவனத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல, மேற்கு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா செல்லும் மக்களுக்காகவும் குத்தம்பாக்கம் கிராமத்தில் பேருந்து முனையம் தயாராகி வருகிறது..

சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் இந்த புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆம்னி பேருந்துகள்: இதற்காகவே, மாநில வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில் 395 கோடி ரூபாயில் ஐந்து லட்சம் சதுர அடியில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பமானது.. புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தும் வசதியும் இங்கு உள்ளதாம்.
இந்நிலையில், இந்த புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு மாற்று சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து சிக்கல் எழுந்துள்ளதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில், 7 கிராமங்கள் வழியாக புதிய சாலை அமைக்க நிலம்எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம்னி பஸ்கள்: இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் சொல்லும்போது, "சென்னை - பெங்களூரு சாலையில் இருந்து, பேருந்து நிலைய பகுதிக்கு செல்லவும், வெளியேறவும் ஒரே சாலைதான் உள்ளது. பொதுவாக, ஆம்னி, வெளியூர் பஸ்கள் உள்ளே சென்று வருவதற்கு தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும்.. அதேபோல, மாநகர பஸ்கள், தனியார் வாகனங்கள் வந்து செல்வதற்கும் தனித்தனி நுழைவாயில்கள், பாதை வசதிகள் இருக்க வேண்டும்.
ஆனால், குத்தம்பாக்கத்தில், அனைத்து வகை வாகனங்களும், ஒரே பாதை மட்டுமே இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான தீர்வை இப்போதே அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்" என்றார்கள்.
புதிய லூப் சாலை: இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் சொல்லும்போது, "திருமழிசை புது நகர் திட்டத்தின் கீழ், இங்கு வெளிவட்ட சாலை - சென்னை பெங்களூரு சாலையை இணைக்கும் வகையில், புதிய லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோலப்பஞ்சேரி, துக்கானம்பட்டு, உடையவர் கோவில், வரதராஜபுரம், காவல்சேரி, திருமழிசை, கீழ்மணம்பேடு, நெஞ்சேரி, குத்தம்பாக்கம், வெள்ளவேடு, நரசிங்கபுரம், பர்வதராஜபுரம், பழங்சூர் கிராமங்களில், 1,605 ஏக்கர் நிலத்தை, நில தொகுப்பு முறையில் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நிலத்தை பயன்படுத்தி, 100 அடி அகலத்தில் லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குத்தம்பாக்கம்: இதனால், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள கிராமங்களில் போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்பு மேம்படும்.. மொத்தத்தில் கிளாம்பாக்கம் போல எந்த பிரச்சனையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்" என்றனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications